சனி பரிகாரத்தலங்கள்
அரகண்டநல்லூர் ;
விழுப்புரத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . இராஜகோபுரம் தெற்கு நோக்கியது ..தென்திசை பார்த்த கோபுரம் வழியே நுழைவதால் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பார்கள் .
இறைவன் - அதுல்ய நாதர் . அதி துல்லியமாக வேத சப்தங்களை அண்டத்தில் உணரச் செய்ததால் இவர் அதி துல்யர் ஆனார் . இப்பெயர் பின்னர் மருவி அதுல்யநாதர் ஆனது .
இறைவி - சௌந்தர்யா கனகாம்பிகை
சனி பகவனுக்கென தனி இடம் .இடுப்பில் கைவைத்தபடி வாகனமான காகத்தில் எறத்தயாரகும் நிலையில் இருக்கிறார் .
வாகனத்தில் ஏறும் தெய்வ வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவை . சக்தி கொண்டவை . அருள் கொண்ட சனி பகவான் தன் பக்தர்களைத் தொல்லையிலிருந்து நீக்குகிறார் .
பாகசாலை ; நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோயிலுக்கு தென் கிழக்கில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது .
இறைவன் _ புரந்தரேஸ்வரர் . இந்திரனுக்கு புரந்திரன் என்று ஒரு பெயர் உண்டு . அவனுக்கு அருள் புரிந்ததால் ஈசன் இவ்வாறு அழைக்கப்படுகிறார் .
இறைவி - கல்யாணி அம்பாள்
வடக்குப் பிரகாரத்தில் சனி பகவான் நின்ற கோலத்தில் தனித்திருந்து அருள் பாலிக்கிறார்
Wednesday, March 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment