Saturday, May 12, 2012


திருவுலா உடல் நலம் மற்றும் ஆயுளுக்கான ஆலயங்கள்

மருந்தீசர் ஆலயம் சிறிய குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள அமைதியான அழகான ஆலயம்
இறைவன் மருந்தீசர் இறைவி இருள் நீக்கி அம்பாள்
தீர்த்தம் மருந்து தீர்த்தம் தல விருட்சம் பலா மரம்

தியாகேசர்ஆலயம்
  • இறைவன்அமுததியாகேசர்
  • இறைவி மைவிழியாள்
  • தீர்த்தம் கூர்ம தீர்த்தம் 
  • தலவிருட்சம் ஆலமரம் 
ஆத்தூர்
 முக்தீஸ்வரர்ஆலயம்
கல்யாணவரதராஜபெருமாள்

Friday, June 12, 2009

ஈரோடு ஆறுபடை முருகன் திருத்தலங்கள் ;


1 . சென்னிமலை
2 . சிவன்மலை
3 . கதித்த மலை
4 . அருள்மலை
5 . திண்டல் மலை
6 . சீனாபுரமலை

Wednesday, March 18, 2009

சனி பரிகாரத்தலங்கள்



அரகண்டநல்லூர் ;
விழுப்புரத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . இராஜகோபுரம் தெற்கு நோக்கியது ..தென்திசை பார்த்த கோபுரம் வழியே நுழைவதால் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பார்கள் .

இறைவன் - அதுல்ய நாதர் . அதி துல்லியமாக வேத சப்தங்களை அண்டத்தில் உணரச் செய்ததால் இவர் அதி துல்யர் ஆனார் . இப்பெயர் பின்னர் மருவி அதுல்யநாதர் ஆனது .

இறைவி - சௌந்தர்யா கனகாம்பிகை



சனி பகவனுக்கென தனி இடம் .இடுப்பில் கைவைத்தபடி வாகனமான காகத்தில் எறத்தயாரகும் நிலையில் இருக்கிறார் .

வாகனத்தில் ஏறும் தெய்வ வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவை . சக்தி கொண்டவை . அருள் கொண்ட சனி பகவான் தன் பக்தர்களைத் தொல்லையிலிருந்து நீக்குகிறார் .




பாகசாலை ; நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோயிலுக்கு தென் கிழக்கில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது .



இறைவன் _ புரந்தரேஸ்வரர் . இந்திரனுக்கு புரந்திரன் என்று ஒரு பெயர் உண்டு . அவனுக்கு அருள் புரிந்ததால் ஈசன் இவ்வாறு அழைக்கப்படுகிறார் .

இறைவி - கல்யாணி அம்பாள்

வடக்குப் பிரகாரத்தில் சனி பகவான் நின்ற கோலத்தில் தனித்திருந்து அருள் பாலிக்கிறார்

Friday, March 13, 2009

சென்னைக்கு அருகில் உள்ள பிணி நீக்கும் சிவாலயங்கள் ;



திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் ;

மிகவும் சிறப்பு வாய்ந்த தொன்மையான ஆலயம் . சிவன் இங்கு அகத்தியருக்கு கைலாய காட்சியை அருளிய இடம் . வான்மீகி முனிவர் வணங்கிய தலமும் இதுவே .



திருக்கச்சூர் மருந்தீஸ்வரரர் ஆலயம் ;


இந்த திருத்தலமும் மிகவும் தொன்மை வாய்ந்த இடமாகும் .


பூந்தமல்லி வைத்தீஸ்வரன் ஆலயம் ;
குபேரனின் ஆலயங்கள் ;


சுருட்டப்பள்ளி - இங்கு உள்ள சிவன் கோயிலில் குபேரன் சன்னதி இருக்கிறது.
இந்த திருத்தலம் சென்னையில் இருந்து ஐம்பத்தி ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . இக்கோயிலின் சிறப்பம்சம் சிவன் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது



கீவளூர் - அட்சய லிங்கேஸ்வரர் ஆலயத்தில் குபேரன் சன்னதி உள்ளது . அம்பாள் ஸ்ரீசுந்தரகுசாம்பிகை . தாயார் சன்னதியில் குபேரன் உள்ளார்


ஈரோடு - கூடுதுறை ஆலயத்தில் ( பவானி) குபேரன் சன்னதி உள்ளது .
மூன்று ஆறுகள் சேருமிடம் . எனவே மிகவும் சிறப்பு பொருந்திய தலமாகும்.

Thursday, June 26, 2008

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற மொழிக்கேற்ப கோயில் நாடி வழிபடவேண்டும் . பக்தி நெறி மூலமாக நம்மை உணர்வதற்கு கோயில்கள் அருந்துணை புரிகின்றன .

பண்டைய காலங்களில் கோயில்கள் சமுதாயத்தின் மிக முக்கியமான அங்கமாகும் . கோயில் இறை வழிபாட்டுத்தலமாக மட்டுமின்றி ,
கல்வி கூடமாக கலைக்கூடமாக மக்கள் மன்றமாக பாதுகாப்பு அரணாகவும் திகழ்ந்துள்ளன .

கோயில் நம் பழந்தமிழரின் கலாச்சார பண்பாட்டு நாகரிகம் மற்றும் அரசியல் நிர்வாகம் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள, கடைபிடிக்க அழியா சான்றாக விளங்குகிறது . கோயில்களை முறையாக காப்பது நமது கடமையாகும்.
தல விருட்சங்களும் , குளங்களும் இயற்கையோடு இணைந்த நம்மக்கள் வாழ்முறைக்கு கட்டியம் கூறுகின்றன .
அத்தகைய சிறப்பு மிக்க சில பழங்கோயில் தரிசனத்திற்கு வழிகாட்டுவதும் பயண ஏற்பாடு செய்வதுமே இந்த திருவுலா வலையின் நோக்கமாகும் .

'தருமமிகு சென்னை ' என்று , வள்ளலார் அவர்களால் புகழப்பட்ட சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள தலங்களே எங்களது முதல் இலக்காகும் .

நவ கோள்களின் (கிரகங்கள் )தரிசனம்

நவகிரகங்களின் அருளும் பார்வையும் நம்வாழ்வினை தீர்மானிக்கிறது .

கோள்களையும் கோள்களின் நாயகனான சிவபெருமானின் அருள்பெற்று வழமோடு வாழ வழிகாட்டுகிறோம்

நவகிரக தலங்கள் ( பரிகாரம் )

ஞாயிறு -சூரியன் : வளமான மகிழ்வான வாழ்வு பெற சூரியன் அருள் புரிகிறார்

காரனோடை- சூரியனார் கோயில்

கொளப்பாக்கம் - அகத்தீஸ்வரர் கோயில்

லிங்கம் , பைரவர் மற்றும் சூரியனையும் சாளரம் மூலமாக ஒரே நேரத்தில் தரிசிப்பது இந்த ஆலயத்தின் சிறப்பாகும்

அழகான நந்தவனமும் , திருக்குளமும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது .

திங்கள் - சந்திரன் : மனக்குழப்பங்கள் நீங்கி மன நலம் பெற சந்திரன் அருள்புரிகிறார்

வட திருமுல்லைவாயில் - மாசிலாமணி நாதர்

சோமங்கலம் - சோமநாதர்

அங்காரகன் - செவ்வாய் :

பூந்தமல்லி - வைத்தீஸ்வரன்

புதன் : கல்வி , கலைகளை அருள்கிறார் புதன்

கோவூர் - திருமெய் ஞான ஈஸ்வரன்

மகாவில்வம்

குரு -வியாழன் :

பாடி - திருவாலீஸ்வரர்
போரூர் - இராமனாதேஸ்வரர்

சுக்கிரன் - வெள்ளி :

மாங்காடு - வெள்ளீஸ்வரர்

மயிலை - வெள்ளீஸ்வரர்

சனி :

பொழிச்சலூர் - சனீஸ்வரன்

ராகு :

குன்றத்தூர் - திருநாகேஸ்வரர் ( வட நாகேஸ்வரம்)

கேது :

கெருகம்பாக்கம் - திருநீலகண்டேஸ்வரர்